வவுனியாவை உலுக்கிய சம்பவம்; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை குடும்பம்..!
வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (07) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் குறித்த நபர் பதிலளிக்கவில்லை,
இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள் மனைவி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் தந்தையான சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது-42) வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மற்றும் அவரது மனைவியான வரதராயினி (வயது-36) இரு குழந்தைகளான மைத்ரா (வயது-09) கேசரா (வயது-03) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர் என வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு குழந்தைகளின் சடலங்கள் வீட்டில் இரண்டு நாற்காலிகளிலும் மனைவியின் சடலம் படுக்கையறையிலும் கண்டெடுக்கப்பட்டது.
மனைவி பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமை புரிபவராக அறிய முடிகிறது.

இரண்டு பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடும்பம் தற்கொலை செய்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிசார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal