
இந்திய மீனவர்கள் 34 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்களும் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.