Month: April 2023

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்!!

இலங்கை முழுதும் ஈஸ்டர் நாளை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.   கத்தோலிக்க தேவாலயங்களை முன்னிறுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

பூப்புனித நீராட்டு விழாவிற்காக வந்து விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் சென்றது!!

 முல்லைத்தீவு- அளம்பில் பகுதியில் மகளுக்கு  பூப்புனித  நீராட்டு விழா செய்வதற்காக வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் உற பூப்புனித நீராட்டு விழாவிற்காக வந்து விபத்தில்…

யாழ். அச்சுவேலி பகுதியில் அரச உத்தியோகத்தர் எனக்கூறி பணமோசடி!!

 யாழ்ப்பாணம் – அச்சுவேலி வளலாய் பகுதியில் தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணொருவரிடம்  சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கவுள்ளதாகவும் அதற்காக இருபதாயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து பண மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மோசடி எனத் தெரிந்த போதும் தன்னுடைய…

தேசிய மரபுரிமை சின்னமாக மாறுகிறது தெமோதரை பாலம்!!

தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை(Nine Arches Bridge) தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

மோல்ட்டா கடற்பரப்பில் 440 அகதிகள் மீட்பு!!

மோல்ட்டா சர்வதேச கடல் பகுதியில் நெரிசலான மீன்பிடி படகொன்றிலிருந்து மொத்தம் 440 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட இவர்கள், சுமார் 11 மணிநேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். இத்தாலி செல்லும்…

40 எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விற்பனை இடைநிறுத்தம்!!

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR குறியீட்டை மீறி தொடர்ச்சியாக எரிபொருள் விற்பனை செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.…

புத்தாண்டை முன்னிட்டு சேவையில் ஈடுபடவுள்ள மேலதிக தனியார் பஸ்கள்!!

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் கொழும்பில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தனியார் பஸ் சேவையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஏப்ரல் 10ஆம் திகதி முதல் விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என…

இலங்கையில் தொலைபேசி  உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா!!

 இலங்கையில் வட்ஸ்எப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனைப் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. வட்ஸ்எப், தொலைப்பேசி, குறுந்தகவல் என அனைத்தும் பாதுகாப்பு அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு, விபரங்கள் சேமிக்கப்பட்டு வருவதாகச் சமுக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இதுதொடர்பாக பாதுகாப்பு…

மின்சாரம் தாக்கி மாணவன் பலி!!

 யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் ஒருவர் பலியான சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.  கொக்குவில் இந்துக்கல்லூரியில் தெழில்நுட்பப்பிரிவு(2024) கற்கும் கிசோத்மன் என்ற மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாளை மதுபானசாலைகள் பூட்டப்படுகிறதா!!

நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் நாளைய தினம் நாட்டில் உள்ள   மதுபான சாலைகள் திறக்கப்படும் எனவும் ஏப்ரல் 13 , 14 ஆகிய தினங்களில் மதுபானசாலைகள் பூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SCSDO's eHEALTH

Let's Heal