Month: March 2023

நள்ளிரவு முதல் மற்றுமொரு பொருளுக்கு விலை குறைப்பு!!

அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவானது 130 ரூபாவிற்கு விற்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என…

பரீட்சைகள் தாமதிக்கும் என திடீர் அறிவிப்பு வெளியானது!!

ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைகளும், 2022ம் ஆண்டின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளும் தாமதிக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி,…

மின் கட்டணம் குறைவதாக வெளியானது அமைச்சரின் அறிவிப்பு!!

ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  புதிய மின்சார…

எரிபொருளுக்கான QR முறையில் புதிய மாற்றம்!!

எரிபொருள் விநியோகத்துக்காக அமுலாக்கப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையின் கீழ், இனி வாராவாரம் செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்படும். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார். இதன்படி இன்று (8) காலை அனைத்து QR கணக்குகளுக்கும் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மதியம் 12.10 மணி…

சீனி விலை குறைந்தது!!

இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த நாட்களில் 220-223 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளை சீனியின் *இன்றை மொத்த விற்பனை…

பேரீச்சம் பழங்களுக்கு விசேட வரிக்குறைப்பு!

எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரியை *கிலோ ஒன்றுக்கு ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைத்து* ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு. எவ்வித செலாவணியும் இன்றி நன்கொடையாக பெறும் பேரீச்சம்பழங்களுக்கே இந்த விசேட…

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!!

வவுனியாவை உலுக்கிய சம்பவம்; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை குடும்பம்..!வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (07) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக…

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!!

எதிர்வரும் 25ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  ஏற்கனவே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு பிற்போடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் அழுத்தம் காரணமாக குறித்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு பஸ்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு – 22 பேர் படுகாயம்!

 நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச  பஸ்ஸொன்றும் மாவனெல்ல கனேகொட பகுதியில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு குறித்த விபத்தில்  22 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…

SCSDO's eHEALTH

Let's Heal