Month: June 2021

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் மேலும் மூவருக்கு கொரோனா!

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுள் ஒரு பொலிஸ் உத்தியோகததரும் இரு சிவில் பாதுகாப்பு படைவீரர்களும் அடங்குகின்றனர். இம்மாத ஆரம்பத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 32…

இலங்கையில் ழுழுவதும் களமிறக்கப்பட்டுள்ள சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து பொலிஸாருக்கு…

யாழ்.பாசையூரில் முண்டியடித்த மக்கள்

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை  இடம்பெற்றுள்ளது. கோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு மக்கள்…

இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் மேற்பட்டோர் அதிரடி கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,353 நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளாவன கைதுகள் பதிவாகியுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும். தனிமைப்படுத்தல் உத்தரவுகளை…

பயணதடையால் பட்டினியில் வாடும் மன்னார் மக்கள்! எதை உண்கின்றார்கள் தெரியுமா?

கொரோனாவினால் நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப் பட்டுள்ள நீண்ட பயணத்தடை காரணமாக அன்றாட கூலி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது பசி பட்டினியை போக்குவதற்கு சேற்று நீரில் மட்டி பொறுக்கி உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலை காணப்படுகின்றது. பயண தடை…

இராணுவ அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது; அவதானம் மக்களே

கொரோனா தொற்று தொடர்பாக போலித் தகவல்களை முகநூலில் வெளியிட்ட இராணுவ அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி வழியிலான குற்றங்களைத் தடுக்கின்ற பிரிவு நேற்று கைது செய்துள்ளனர். கைதானவர் இராணுவத்தின் முன்னாள் அதிகாரி என்பதோடு,…

ஊரடங்கு என்ற பேச்சுக்கே அவசியமில்லை!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடையை தளர்த்திவிட்டு முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் முழுமையான ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள்…

வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் இருந்து வந்த உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாகனங்களுக்கு ஸ்டிக்கர் முறையை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் பயணக்கட்டுப்பாட்டு இடையே வாகனங்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு பொலிஸார் அறிமுகப்படுத்திய ஸ்டிக்கர் முறை தொடர்பில் அரசாங்கத்திற்குள் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் இந்த…

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இலங்கை பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம்!

 அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய உயர்மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக உயர் கல்விக்கான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில்,வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கீழ்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின்…

ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் அழைப்பு!!

2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதில் உறுதியளிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ஜி-7 நாடுகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த கொடூரமான தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர எங்களுடன் இணையுமாறு எனது…

SCSDO's eHEALTH

Let's Heal