திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சிறைக்கைதிகள் ஐவருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மேற்படி அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், கடந்த மூன்று தினங்களில் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் 21 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, கோதுமை ஆலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal