திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சந்தேக நபரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4-01-2022) உத்தரவிட்டுள்ளார்.
மூதூர், தோப்பூர், பங்களா பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒருவரே (38 வயது) இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சந்தேகநபர் அயல் வீட்டில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர்களினால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.