விக்டோரியா அணையில் விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் பொய்யானது என இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் வாய்மூலக் கேள்விக்கு சபையில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், அணையில் விரிசல் ஏதும் இல்லை எனவும் அதனால் நீர் கசிவுகள் இல்லை எனவும் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, நீர் மின் உற்பத்தி தொடர்பில் தீர்மானிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் ஒருவரின் நலன்களில் முரண்பாடு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் யாப்பா பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

“இந்தப் பொறியாளரும் சாகுபடிக்குத் தண்ணீர் கேட்பவர்களில் ஒருவர். அதனால், இந்த அதிகாரி தரப்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவரது நடவடிக்கையால் தண்ணீர் மேலாண்மையில் முறைகேடு ஏற்பட்டுள்ளது,” என்றார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும், மேற்படி பொறியியலாளர் தரப்பில் முரண்பாடு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal