
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் சிற்றூழியராக கடமையாற்றும் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 36) என்பவருக்கு வீட்டில் இருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை இடம்பெற்று சடலம் அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.