இன்று (புதன்கிழமை)காலை, யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயியல் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகை தந்துஇதனைத் திறந்து வைத்தார் .

இது குறித்து கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் பவானந்தராஜா இவ்வாறு தெரிவித்தார், ”உலகளாவிய ரீதியிலும் சரி இலங்கையிலும் சரி இறப்புகளுக்கான இரண்டாவதாக காரணமாக இருப்பது புற்று நோய். எனவே அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து தடுப்பதன் மூலம் இறப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் .

வரலாற்றில் முதன்முதலாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சிகிச்சை நிலையம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையம் புற்று நோயாளர்களுக்கான நிலையம் அன்றி புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு கூட்டியே அதனை ஏற்படாமல் தடுப்பதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே அதனைக் கண்டறிவதற்கான ஒரு நிலையமாகும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒரு வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களுடைய புற்றுநோய் சம்பந்தமான சந்தேகங்களைக் குறித்த சிகிச்சைநிலையத்திற்கு வருகை தந்து தெரிந்துகொள்ளலாம்
கொழும்புக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்திலே குறித்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி எவ்விதத் தயக்கமுமின்றி தமக்குரிய பரிசோதனைகளை குறித்த சிகிச்சை நிலையத்திற்கு வருகை தந்து மேற்கொள்ள முடியும்” எனவும் தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal