தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு அருகில் காணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு 11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

அது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த 24 மணித்தியாலங்களில் அது பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களிலும் வட மாகாணத்திலும் சிறிதளவில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 24 மணித்தியாலங்களில் தமிழ் நாட்டை நோக்கி நகரும் சாத்தியம் நாட்டின் சில் இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal