நிலாவரை கிணற்றிற்கு அருகில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பகுதியென அடையாளமிடப்பட்ட பகுதியில் இன்று துப்பரவு பணியில் ஈடுபடவுள்ளதாக நேற்று, வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு, தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ,அதை எழுத்துமூலம் வழங்கும்படி கேட்டிருந்த போதும் , எழுத்துமூலம் தகவல் வழங்காமல் இன்று தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு பணியை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் நிலத்தை அகழும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal