
கொழும்பு- பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாம்பமுனுவ, கொரக்காபிட்டி கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலி- அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடஹேன, தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் அம்பாறை- தெய்யத்தகண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெய்யத்தகண்டி மற்றும் கதிராபுற கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இதனிடையே இரத்தினபுரி- கலவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.