
இன்று காலை புதுக்குடியிருப்பு- பரந்தன் வீதி தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மகன் படுகாயமடைந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
விபத்தில் சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த வள்ளிபுனம் ஜெயராசா (53) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனமும் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலீசரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்குறித்தான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.