
மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள், ஒன்றிணைந்து மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர், பொதுமக்கள், சமூகஅமைப்பினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.