போதைப்பொருள் கடத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் அதன் பயன்பாட்டை ஒழிப்பதற்கு புதிய படையணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்போம் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 

இளைஞர்களை அழிக்கும் நச்சுத்தன்மையுள்ள போதைப்பொருள் மற்றும் அபாயகர ஔடதங்கள் பயன்படுத்துவது குறித்து தடுக்கும் எதிர்கால நடவடிக்கை குறித்த ஒன்றுகூடல் நீதிஅமைச்சில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தற்போது போதைப்பாவனை விசக்கிருமியாகப் பரவியுள்ள நிலையில் அரசாங்கம் முழு மூச்சாக இந்நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal