
தேவையான பொருட்கள்:
- பூண்டு – 1 கப்
- புளி – நெல்லிக்காய் அளவு
- கடுகு – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 3/4 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – சிறிது
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- தோலுரித்த பூண்டிதழ்களை நுனியை நறுக்கி எடுத்து வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும், வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம் இரண்டையும் தனித்தனியாகக் தீய்ந்து விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்து வைத்த கடுகு, வெந்தயம் ஆறியதும் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
- தோலுரித்த பூண்டில் மூன்றில் இரண்டு பங்கெடுத்து, அதைப் புளியுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் (சிறிது கூடுதலாகச் சேர்க்கவும்) ஊற்றிக் காய்ந்ததும், மீதமுள்ள ஒரு பங்கு பூண்டைப் போட்டுச் சிறிது நேரம் வதக்கவும்.
- பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறவும்.
- பூண்டின் பச்சை வாசம் போகும்வரை அடிப்பிடித்து விடாமல் வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் போது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- பெருங்காயம் மற்றும் பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- நன்றாக ஆறிய பிறகு, கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.