
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் பளு தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவின் 45 கிலோ கிராம் பிரிவில் இலங்கையின் வீராங்கனையான ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்த போட்டி இன்று நடைபெற்றது. ஸ்ரீமாலி சமரகோன்(Srimali Samarakoon) கண்டி மஹாமாயா பெண்கள் பாடசாலையின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய நாடுகளில் பளு தூக்கும் போட்டி உஸ்பெகிஸ்தானின் Tashkent நகரில் நடைபெற்று வருகிறது.