திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், அணிந்திருந்த அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் அவர்கள் சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இதனையடுத்து, திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகம், குறித்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் சீனத்தூதரகத்திடம் கோரியதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal