நாட்டில் பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தினைத் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் QR Code உள்ளடங்கிய புதிய தடுப்பூசி அட்டையும் தடுப்பூசி செயலியும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் தடுப்பூசி ஏற்றுகையை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை இதுவரையில் நாட்டில் 28 வீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் பொது இடங்களுக்கு செல்லவேண்டுமெனில் இது கட்டாயம்!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal