நவம்பர்  8 ஆம் திகதி பகுதியளவான சந்திரக் கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சந்திரக் கிரகணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு அளவிலான சந்திர கிரகணமாக தென்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 8 ஆம் திகதி மாலை 5.48க்கு சந்திரன் உதயமாகும் என்பதுடன்,  இலங்கையில் சந்திர கிரகணத்தின் இறுதிப் பகுதியைக் காணலாம் எனவும் மாலை 6.19க்கு பகுதியளவான சந்திரக் கிரகணம் நிறைவடையும் எனவும்  பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் முழு அளவிலான சந்திரக் கிரகணத்தை பார்வையிட முடியும் என கூறப்பட்டுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal