
இன்று காலை கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று ரொசல்லை தொடருந்து நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது.
இதன்காரணமாக மலையகத்திற்கான தொடருந்து போக்குவரத்துக்கள் தாமதமாகக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தடம்புரண்ட தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.