
நேற்று மாலை சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – புத்தளம் வீதியில் சூப்பர் மார்கெட் நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றினுள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
66 வயதுடைய கண்டி, அம்பிடிய, தம்வெலபார வீதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்த நிலையில் வாகனத்தின் சாரதி இருக்கையில் காணப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.