
காதலன் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே, தான் காதலித்து வந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்ததனால் மனமுடைந்த நிலையில் இன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஏற்றதல்ல என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.