
காணி பிரச்சினை காரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலைச்செய்யப்பட்டுள்ள்ள சம்பவம், பல்லேவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு கொலைச்செய்யப்பட்டவர் 70 வயதுடைய பல்லேவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.