
வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் வடமாகாண பாடசாலைகளுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்காக மாணவர்களை ஒருங்கிணைத்து நடாத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எதிர்வரும் 31.05.2021 வரை வகுப்பறைகளிலேயே காலை நேரப் பிரார்த்தனைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.