திருகோணமலை – கண்டி வீதியில் மங்குபிரிஞ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியைவிட்டு விலகி கோர விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் துறை தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
