
நாட்டில் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது மக்கைளடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த தகவலினை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக 840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சியானது தற்போது 650 ரூபாவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் சந்தையில் முட்டையின் விலையானது 30 ரூபாயாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.