கொரோவால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும் போது, ​​ திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் நலின் கிதுல்வத்த எச்சரித்துள்ளார்.

சுவாசக் கஷ்டம் அல்லது பேசவோ நடக்கவோ இயலாமை போன்ற எந்த முன் அறிகுறிகளும் இல்லாமல், எதிர்பாராத விதமாக தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஒட்சிசன் அளவு குறைவதாகவும் அவர் தெரிவித்தார்.

  ஓடுதல் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர் ஈடுபடும் போது, ​​குழந்தையின் இயல்பான நிலையில் இருந்து ஒட்சிசன் அளவு குறைகிறதாகவும் கூறிய அவர், இது சைலண்ட் ஹைபொக்ஸியா என்று குறிப்பிடப்படுகிறது. எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குழந்தையின் ஒட்சிசன் அளவை கண்காணிக்க வேண்டுமெனவும் அவர் பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.

ஒரு சிறு செயல்பாட்டிற்குப் பிறகு குழந்தையின் ஒட்சிசன் அளவு 94 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் அல்லது ஓய்வெடுக்கும்போது ஒட்சிசன் அளவு 96 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால், உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது முக்கியம் என்றும் வைத்தியர் கிதுல்வத்த கூறினார்.

இதேவேளை கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆறு படுக்கைகளிலும் கொரோனா தொற்றிற்குள்ளான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இணைக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மோசமான சூழ்நிலை எழுந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

மேலும் ஆல்பா வைரஸ் மாறுபாட்டோடு ஒப்பிடும்போது, ​​தற்போதைய வைரஸ் வகைகள் மிகவும் முக்கியமானவை என்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் நலின் கிதுல்வத்த கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal