
நாளை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் நாட்டின் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பது குறித்து ஆளும், எதிர்கட்சியினர் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் விசேடமாக நாடு முடக்கப்படுமா? இல்லையா? மற்றும் பல வித கட்டுப்பாடுகள் குறித்து அரச தரப்பு நாளை சபையில் விளக்கம் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.