மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவிலுள்ள உப்போடை ஆற்ற்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மீன் பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசர் ஆற்றில் கரை ஒதுங்கிய சடலத்தை மீட்டுள்ளனர்.
அதேவேளை சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவினை பெற்று பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை ஜெயந்திபுரம் பகுதில் மலசல கூடத்தில் தரை சறுக்கி 44 வயதுடைய ஆண் ஒருவர் இன்று காலை உயிரிழந்தமை குறிப்பித்தக்கது.

