
அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தற்காலிகமாக வந்துள்ள சீன கப்பலில் இருப்பதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்பட வேண்டும் என்றாலும் குறித்த கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றப்படவில்லை எனவும் பணிப்பாளர் எச்.எல்.அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
எனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு உரைமியாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.