
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி 17 ஆண்களும் 04 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,440ஆக அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 06 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் 541 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 566,737 ஆக அதிகரித்துள்ளது.