ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவிக் கடனாக வழங்குகிறது.

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்தக் கடனுதவி வழங்கப்படுகின்றது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து அவசரகால கடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது, ​​ஆசியா மற்றும் பசிபிக் நிதியம், திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.

இந்த நிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாகவே வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal