விசேட அதிரடிப்படையின் நெல்லியடி முகாமின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் அடங்கிய வில்லைகளை தம்வசம் வைத்திருந்த மூவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மருத்துவ சீட்டு இல்லாமல் ஆபத்தான மருந்தான PREGABALIN CAPSULES (150mg) என்ற 278 மாத்திரைகளை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் ஏழாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal