
ரத்து செய்யப்பட்ட அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமாற்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய அமைச்சரவை நியமனம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அதன் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதியரசர்கள் விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான இந்திக தேவமுனி டி சில்வா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி அணைத்து சமர்பணங்களை உறுதிப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள