யாழில் போதைப்பாவனை பெருகியுள்ள நிலையில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்தியில் சகோதரி உயரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் நேற்று (10-09-2022) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 20 வயதுடைய இளம் பெண்ணே உயிரை மாய்த்துள்ளார்.

அவரது சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியுள்ளார்.

அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal