
ஜோர்ஜியாவின் அட்லாண்டா பகுதியில் உள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது 8பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தில் 21 வயதுடைய ரொபர்ட் ஆரோன் லாங் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.