2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள், கல்வி அமைச்சால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் எனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.