×

அம்பாந்தோட்டை - தங்கல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொடவில், ஒரு வீட்டின் முன்பாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு (11) இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலியத்த, சியம்பலகொட, திகங்வல பகுதியில் வசஜத்துவந்த கங்கணம் அரச்சிங்கே தனபால என்ற 88 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனது மனைவியுடன் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர்க்குழாய் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன. இந்நிலையில், இவரை யாரோ கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவரின் இளைய மகனான 48 வயது நபரை தங்கல்லை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் என்றும், அவர் நேற்று (11) காலை சுமார் 11 மணியளவில் தனது தந்தை வீட்டிற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது கடுமையாக போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தங்கல்லை தலைமையக பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115