இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய கொடிகந்த பகுதியில் ஒருவர் இரும்பு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
உயிழந்தவர் கொடிகந்தப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கும் மேலும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக எம்பிலிப்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.