கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், கோட்டாபயவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு இராபோசனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது முக்கியமான அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற்றதாகவும் சில அரசியல் தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்தவுக்கே இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, இராபோசன விருந்து ஒன்றை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
சுசில் பிரேமஜயந்த மாத்திரமல்லாது நிமல் லங்சாவும் கடந்த வாரங்களில் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
