கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை எனவும் இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறு கைத்தொழில் அல்லது வங்கிக் கடன் ஊவா தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனினும் வழங்கப்பட்ட அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு இன்று வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு புனர்வாழ்வு பெற்ற சிலர் தற்கொலை செய்தும் கொண்டுள்ளதாகவும் கூறிய செல்வம் அடைக்கலநாதன், எனவே வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறும் கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal