தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய நாளை மறுதினம் இந்த விசேட விடுமுறை வழங்க மாகாணங்களின் ஆளுநர்களினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.