2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தரம் மற்றும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.