இலங்கையின் பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் குழுவிலிருந்து நேற்று இராஜினாமா செய்தமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ இராஜின் கன்னத்தில் அறைந்தமையே அவரின் இராஜினாமாவிற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
எனினும் இந்த செய்தியை யோஷித்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.