
பொசனை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைசெய்யப்படவுள்ளவர்கள் மிக நீண்ட காலம் சிறையில் உள்ளவர்கள் எனவும் அதி குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் அனுபவிக்கவேண்டிய தண்டனை காலத்தை விடவும் அவர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 216 கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.