கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை RDO வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரும், பிறைந்துறைச்சேனை அறபா வீதியை சேர்ந்த 51 வயதுடைய சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு பேர் மரணமடைந்தனர்.

அத்தோடு திங்கள்கிழமை RDO வீதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மரணமானதுடன், 74 வயதுடைய அவரது மனைவி நேற்று இரவு மரணமடைந்ததுள்ளார். அத்துடன் , வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் மரணமடைந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் காரணமாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் இதுவரையில் ஐந்து பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest


0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal