எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன்

ஆற்றுதல்’ என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
‘போற்றுதல்’ என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
‘பண்பு’ எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
‘அன்பு’ எனப்படுவது தன் கிளை செறாஅமை;
‘அறிவு’ எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;
‘செறிவு’ எனப்படுவது கூறியது மறாஅமை;
‘நிறை’ எனப்படுவது மறை பிறர் அறியாமை;
‘முறை’ எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
‘பொறை’ எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;

ஆற்றுதல் என்பது அலைக்கழிவோருக்குத் தொண்டாற்றி உதவுதல்.
போற்றுதல் என்பது தம்மைப் புணர்ந்தவரைப் பிரியாமல் இருத்தல்.
பண்பு என்று சொல்லப்படுவது பெருமை தரத்தக்கது எது என அறிந்து அதன்படி நடத்தல்.
அன்பு எனப்படுவது தன் உறவுக்காரர்களை விட்டு விலகாமை.
அறிவு என்று சொல்லப்படுவது அறியாவர் சொல்லும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்.
செறிவு எனப்படுவது சொன்ன சொல்லை மறுத்துப் பேசாமை.
நிறை எனப்படுவது தான் மறைக்கவேண்டடிய நிகழ்வுகளை பிறர் அறியாவண்ணம் நடந்துகொள்ளுதல்.
முறை எனப்படுவது குற்றம் செய்தவனுக்கு இரக்கம் காட்டாமல் அரசன் அவன் உயிரை வாங்குதல்.
பொறை எனப்படுவது. தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal