
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.
தனக்கு கடும் நெஞ்சுவலி என அவர் தெரிவித்த நிலையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை கிளிநொச்சிப் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று மாலை கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளியொருவர் தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.